அடக்குமுறைச் சமூகத்தில்
அடங்க மறுத்தால் அகம்பாவம்
திணிக்கும் விதிகளை
எதிர்க்கத் துணிந்தால் அகம்பாவம்
இருக்கும் திறமையை
எடுத்து உரைத்தால் அகம்பாவம்
அநீதி கண்டு
ஆத்திரம் அடைந்தால் அகம்பாவம்
அடுத்தவர் தயவை
புறக்கணித்தாலே அகம்பாவம்
தன்னை மட்டுமே
நம்பி வாழ்வதும் அகம்பாவம்
அகம்பாவம் அகம்பாவம்
தலைவணங்காத தகுதிகளெல்லாம் அகம்பாவம்
இவைதான் எந்தன்
தனித்துவம் வாய்ந்த சுபாவம்
நானென்ன செய்ய? |
18 June 2010